search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாயத்து அலுவலகம்"

    • திட்டக்குடி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    • திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.

    கடலூர்:  திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.  இதுகுறித்து பொது மக்கள் புகார் தெரிவித்தும் ஊராட்சி மன்ற தலைவர் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 7-ந் தேதி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்ட–த்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மாயவேல் 8-ந் தேதியே ஆக்கிரமிப்பை அகற்ற படும் என உறுதியளித்தார். ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மதியம் கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆவினங்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 12 ம் தேதி இன்று மாலை 6 மணிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தார். இதை யேற்று போராட்டக் காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×